வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதமான ரெப்போ விகிதம் உயர்வு - ஆர்பிஐ

0 3019

வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 4 புள்ளி 4 விழுக்காட்டில் இருந்து 4 புள்ளி 9 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்,நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 2 விழுக்காடாக இருக்கும் எனக் கணித்துள்ளதாகத் தெரிவித்தார்.

வீட்டு விலைகள் உயர்ந்துள்ளதைக் கருத்திற்கொண்டு நகரக் கூட்டுறவு வங்கிகள், ஊரகக் கூட்டுறவு வங்கிகளில் தனிநபரின் வீட்டுக்கடன்களுக்குப் பத்தாண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் திருத்தி நூறு விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments