உரிய முறையில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது

0 3310

ஆம்பூர் அருகே உரிய முறையில் மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாச்சாம்பட்டு மற்றும் உமராபாத் பகுதியில் உள்ள இரு மருந்துக்கடைகளில், போலி மருத்துவர்கள் குறித்த தொடர் புகாரின் பேரில் ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், உரிய மருத்துவம் படிக்காமல் 2 பேர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்த நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments