கனரக லாரி உரசி மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

0 2439

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே கனரக லாரி ஒன்று உரசி மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பயணிகள் உயிர்தப்பினர்.

குரோம்பேட்டையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இசை கச்சேரி செய்வதற்காக 20பேர் கொண்ட குழுவினர் தனியார் மினி பேருந்தில் புறப்பட்டு சென்றனர்.

அந்த பேருந்து பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்ற போது கனரக லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments