செவிலியரின் செல்போன் தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம்.. செவிலியரை மகளிர் போலீசார் வாகனத்தில் ஏற்றும் போது கைகலப்பு..!

0 5331
செவிலியரின் செல்போன் தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம்.. செவிலியரை மகளிர் போலீசார் வாகனத்தில் ஏற்றும் போது கைகலப்பு..!

சென்னையில் Protsத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றபோது, செவிலியர் ஒருவரின் செல்போன் தாக்கியதில் பெண் காவல் ஆய்வாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு செவிலியர்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதில், ஒரு செவிலியரை மகளிர் போலீசார் வாகனத்தில் ஏற்றும் போது கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரத்தில் செவிலியர் ஒருவர் கை ஓங்கியபோது அவரது கையில் இருந்த செல்போன் தாக்கியதில் காவல் நிலைய ஆய்வாளர் ராஜியின் தலையில் காயம் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments