டாஸ்மாக் கடை காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை.!

0 2440

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடை காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு, மதுபாட்டில்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிய முகமூடி அணிந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கலியாந்தூரில் உள்ள டாஸ்மாக்கிற்கு நள்ளிரவு 2 மணியளவில் ஒரே மாதிரியான டி-சர்ட், முகமூடி அணிந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த காவலாளி தீர்த்தம் என்பவரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் கத்திக் கூச்சலிட்டதால் அரிவாளால் தலையில் வெட்டிய மர்ம கும்பல், அவர் மயங்கியதும் சுமார் 50 பெட்டி மதுபானங்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments