பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... தலைமறைவான தலைமை ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு.!

0 3110

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில், பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் தலைமை ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெங்கடேசன் என்ற அந்த தலைமை ஆசிரியர், இரண்டு பத்தாம் வகுப்பு மாணவிகளை வெவ்வேறு நாட்களில் வகுப்புகள் முடிந்த பின் பள்ளியில் இருக்கச் சொல்லி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவிகள் குழந்தைகளுக்கான உதவி எண் 1098-ஐ அழைத்து புகார் அளித்துள்ளனர்.

தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments