புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய சென்னை ஐஐடி.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கலாம் என அறிவிப்பு.!

0 2355

புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கணினி மூலம் "அவுட் ஆஃப் தி பாக்ஸ்" என்ற புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கலாம் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி முடித்த மாணவர்கள் ஆறாம் வகுப்பில் இருந்து வயது வரம்பின்றி இந்த திட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் ஆன்லைன் முறையில் தேர்வும் நடத்தப்படும் என்றும் காமகோடி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments