திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி.. 5 மாதங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி ரத்து..!

0 2701
திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி.. 5 மாதங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி ரத்து..!

கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கியதால், இன்று முதல் 5 மாதங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளூர் சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது ஒரு கோடி ரூபாய் செலவில் ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments