சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறப்பு

0 2435

சென்னையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காமராசர் சாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையகரத்தில், ' அனைத்தும் சாத்தியம் ' என்ற பெயரில், மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியின்றி தங்களது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது குறித்து விளக்கும் விதமான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர், மாற்றுத்திறனுடையோருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments