வங்கதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் பயங்கர தீ விபத்து- 40 பேர் உயிரிழப்பு

0 2003

வங்கதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதாக அதிகரித்துள்ளது.

சிட்டகாங் (Chittagong) மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கண்டெய்னர் கிடங்கில் இருந்த ரசாயனம் நள்ளிரவில் திடீரென வெடித்து சிதறியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். 450 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments