கும்மிடிப்பூண்டி அருகே 5 இருசக்கர வாகனங்களுக்கு மர்மநபர்கள் தீ வைப்பு.. போலீசார் விசாரணை.!

0 2541

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 5 பைக்குகளுக்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேர்வழி கிராமத்தில் குமார் என்பவரது கடை முன்பாக அதிகாலை 2 மணியளவில் பைக்குகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளன.

அதனை பார்த்த ஒருவர் உடனடியாக கடையின் பின்புறம் தூங்கிக்கொண்டிருந்த குமாரிடம் தெரித்துள்ளார்.

பின்னர் குமார் அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற கும்மிடிப்பூண்டி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி பைக்குகளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments