எத்தனால், மெத்தனால் ஆகியவையே வருங்கால எரிபொருட்களாக இருக்கும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 2768
எத்தனால், மெத்தனால் ஆகியவையே வருங்கால எரிபொருட்களாக இருக்கும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

எத்தனால், மெத்தனால் போன்றவையே எதிர்கால எரிபொருட்களாக இருக்குமென என குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விரைவில் மின்சார டிராக்டர், லாரியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிசக்தி மற்றும் ஆற்றல் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போது ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறினார்.

மேலும், தேவை அதிகரிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும் என்பதால், அது பொருளாதாரத்தை பாதிக்கும் என குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments