ஸ்விக்கி நிறுவன ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

0 9413
ஸ்விக்கி நிறுவன ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கோவையில் ஸ்விக்கி நிறுவன ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியோ காட்சி வெளியான நிலையில், அந்த காவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலாம்பூரை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரியான மோகன சுந்தரம் என்பவர் ஸ்விக்கியில் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று, தனது இருசக்கர வானத்தில் சென்றபோது, போக்குவரத்து காவலரான சதீஷ் என்பவர், பளார் என கன்னத்தில் அறைந்ததுடன், வாகன சாவியையும் கைப்பற்றினார்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இது பற்றி தெரிவித்த மோகன சுந்தரம், இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பள்ளி வாகனத்தை, தான் மடக்கி பிடித்தபோது போலீசார் தாக்கியதாக கூறினார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த கோவை மாநகர காவல்துறை உத்தரவிட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments