சேலத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது.!

0 19165

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது முழுமையடையாத நிலையில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிப்புக்கான மூலப் பொருளை வைத்திருந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த அன்பழகன் மகன் கபிலன் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்த போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments