வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியது தென் கொரியா..!

0 1983

தென்கொரியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய தென்கொரிய பிரதமர் ஹான் டக்-சூ, தடுப்பூசி செலுத்தாமல் தென்கொரியா வரும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறை வரும் ஜூன் 8ம் தேதி முதல் நீக்கப்படும் என அறிவித்தார்.

அதே போல, சர்வேதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். எனினும், பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments