ரோகினி திரையரங்கு உரிமையாளர் மகன் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில், கால் டாக்சி ஓட்டுநர் பலத்த காயம்

0 6495
ரோகினி திரையரங்கு உரிமையாளர் மகன் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில், கால் டாக்சி ஓட்டுநர் பலத்த காயம்

சென்னை அடையாறில் ரோகினி திரையரங்கு உரிமையாளர் மகன் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில், கால் டாக்சி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.

மாநகராட்சி பூங்கா நுழைவு வாயில் அருகே நின்றிருந்த கால் டாக்ஸி ஓட்டுனர் சோலைமுத்து, கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். அவரது குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது. விசாரணையில் பிஎம்டபிள்யு காரை ஓட்டி வந்தவர் தியாகராயர் நகரை சேர்ந்த ரேவந்த் என்பதும், இவர் ரோகிணி திரையரங்க உரிமையாளர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் என்பதும் தெரிய வந்தது.

ரேவந்த் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த அடையாறு சாஸ்திரிநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர். இரு கால்களிலும் பலத்த காயமடைந்த சோலைமுத்து,தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments