மாநிலங்களவைத் தேர்தல்: சத்தீஸ்கருக்கு அழைத்து செல்லப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள்..!

0 2699

மாநிலங்களவைத் தேர்தலில் அரியானா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களிப்பதைத் தடுக்க அவர்களைச் சொகுசுப் பேருந்தில் ஏற்றிச் சத்தீஸ்கருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அரியானாவில் மாநிலங்களவைக்கு 2 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸ், சுயேச்சை என 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெறத் தேவையான 31 உறுப்பினர்களைப் பெற்றிருந்தும் கட்சி மாறி வாக்களிக்கக் கூடும் என்கிற அச்சத்தால், அனைவரையும் சொகுசுப் பேருந்தில் ஏற்றித் தேர்தல் நாள் வரை பாதுகாப்பாக விடுதியில் வைத்திருக்கச் சத்தீஸ்கருக்கு அழைத்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments