ஜம்மு காஷ்மீரில் வங்கி மேலாளர் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள்.!

0 2387

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய் குமார், அரே மோகன்போரா பகுதியில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். காலையில் வங்கிக்குள் புகுந்த தீவிரவாதி, விஜய்குமார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடினான்.

இதில் படுகாயமடைந்த விஜய் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஷ்மீரில் நேற்று முன்தினம் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் மீது தாக்குதல் தொடருவதாக கூறப்படும் நிலையில், வெளிமாநிலத்தவர்கள் மீதும் தாக்குதல் தொடருவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments