தொழில் போட்டி காரணமாக மளிகை கடை வியாபாரியின் மகன் கடத்தல்? சிசிடிவிக் காட்சி

0 3036

சேலம் மாவட்டம் சின்னக்கடை வீதியில், மளிகைக் கடை வியாபாரியின் மகனை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி செல்லும் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த முல்லா ராம், கடந்த 3 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வரும் நிலையில், இன்று காலை அவரது கடைக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், முல்லா ராமின் மகன் ஜெயராமை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வலுகட்டாயமாக இழுத்து சென்று காரில் கடத்தி சென்றனர்.

இச்சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், புகாரின் பேரில் சேலம் மாநகர துணை ஆணையர் மோகன்ராஜ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments