கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2-வது நாளாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறைவால் பயணிகள் கடும் அவதி.!

0 2838

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2-வது நாளாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறைவால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மாலை முதல் காத்திருந்த பயணிகள் பேருந்துகள் வராததால் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் குதித்தனர்.

கிடைத்த ஒரிரு பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடித்துக் கொண்டனர்.

குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் பட்சத்தில் முன்பதிவு பிரச்சினைகளால் அதிலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக பேருந்துகள் குறைந்தளவில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments