ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆதரவாக தீர்ப்பு.. ஆம்பர் ஹேர்ட்டு இழப்பீடு வழங்க நடுவர்கள் உத்தரவு..!

0 3565
ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆதரவாக தீர்ப்பு.. ஆம்பர் ஹேர்ட்டு இழப்பீடு வழங்க நடுவர்கள் உத்தரவு..!

அவதூறு வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரை கரம்பிடித்த ஜானி டெப், 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர்.

இதன்பின் 2018-ல் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய கட்டுரையால் பல படங்கள் ஜானி டெப்பின்  கையை விட்டுச் சென்றன. இதனால் அவதூறாக 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஜானி டெப் ஆம்பர் மீது வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆம்பர் 10 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகையாகவும், 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments