தேர்வு எழுதி முடித்த நிலையில், வகுப்பறைக்கு வர்ணம் பூசி பிரியாவிடை பெற்ற மாணவர்கள்.!

0 2504

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி முடித்த நிலையில், சிறுசேமிப்பு தொகை சேர்த்து வகுப்பறைக்கு வர்ணம் பூசி பிரியாவிடை பெற்றனர்.

கடிநெயல்வயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு தேர்வு எழுதி முடித்த சுமார் 60 மாணவர்கள் ஒன்றிணைந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் சேர்த்து அதன் மூலம் பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வர்ணம் பூசி வகுப்பறையை புதுப்பொலிவுறச் செய்துள்ளனர். மேலும், பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளையும் வழங்கி சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments