பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது.!

0 2046

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.

இன்னும் 2 நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சித்து மூசாவாலாவின் காரைப் பின் தொடர்ந்து கொலையாளிகள் இரண்டு கார்களில் வந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இக்கொலைக்கு ரவுடிகளுடனான முன்விரோதம் காரணமாக கருதப்பட்டது. ஆனால் எதிரியான தாதா லாரன்ஸ் பிஷோனய் தமக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments