திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் பொறுப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு உள்ளது - மகேந்திரசிங் தோனி!

0 2147

திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் பொறுப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார். 

சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய தோனி, கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் என்றார்.

முன்னதாக பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு தோனி விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments