தீக்குளித்த நபர் அருகே நின்று "செல்பி" எடுக்க முயற்சி

0 3063

துருக்கி நாட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் அருகே நின்று சிலர் செல்பி எடுக்க முயன்றனர்.

இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கலாட்டா கோபுரத்தின் எதிரே நீண்ட நேரமாக ஒருவர் அரிவாள் மற்றும் பெட்ரோல் கேனுடன் சுற்றித் திரிந்துள்ளார். விரக்தியுடன் அலைந்த அந்த நபர் திடீரென தீக்குளித்தார்.

அப்போது சிலர் அவர் அருகே நின்று செல்பி எடுக்க முயன்றனர். தீ அணைப்பான்கள் மூலம் நெருப்பு அணைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments