சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இரு வீராங்கனைகளுக்கு ரூ.2 கோடி பரிசு அறிவிப்பு!

0 2047

துருக்கியில் நடைபெற்ற 12-வது சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தெலுங்கானாவை சேர்ந்த நிகத் ஜரீனுக்கு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

இதேபோல் ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற இஷா சிங்குக்கும் 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

இருவருக்கும் பஞ்சாரா ஹில்ஸ் அல்லது ஜூப்லி ஹில்ஸில் வீட்டு மனைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments