தஞ்சையில் 9 பேர் கொண்ட கும்பல் நகை வியாபாரியின் பையை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 3169
தஞ்சையில் 9 பேர் கொண்ட கும்பல் நகை வியாபாரியின் பையை பறித்துச் சென்ற காட்சி காட்சிகள்

தஞ்சையில் தங்க நகை வியாபாரியிடம் இருந்து சுமார் ஆறரை கிலோ தங்கம், 14 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், வெள்ளை சட்டை அணிந்த 9 பேர் கொண்ட கும்பல் நகை வியாபாரியின் பையை பறித்துச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

நகை வியாபாரியான மணி என்பவர் ஆர்டர் எடுத்த நகைகளை கொடுப்பதற்காக நகைகளையும் பணத்தையும் கருப்பு நிற பையில் வைத்து கொண்டு சென்றார். இதை நோட்டமிட்டு பின் தொடர்ந்த கும்பல், பேருந்து நிலையம் அருகே மணி ஒரு உணவகத்தில் சப்பாத்தி வாங்கிய நேரம் பார்த்து பையை திருடிச் சென்றது.

சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், ஒரே மாதிரியான வெள்ளை சட்டை அணிந்த கொள்ளை கும்பல் பையை திருடிச் சென்றதும், அவர்களை நகை வியாபாரி துரத்திச் சென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments