மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

0 1886

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்த 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்களின் பரிசீலனை தமிழகச் சட்டப்பேரவைச் செயல் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது.

அப்போது திமுகவின் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், அதிமுகவின் சி.வி.சண்முகம், தர்மர், காங்கிரசின் ப.சிதம்பரம் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் அன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments