பெண் தூக்கிட்டு தற்கொலை.. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மருமகனின் மீது பெண்ணின் தாயார் புகார்..!

0 3756
பெண் தூக்கிட்டு தற்கொலை.. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மருமகனின் மீது பெண்ணின் தாயார் புகார்..!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலக் கோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் தனியார் கல்லூரியின் துறை முதல்வரான வெங்கடேஷ் என்பவரது மனைவி லாவன்யா, கருத்து வேறுபாடு காரணமாக 2 பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் வெங்கடேஷின் பெற்றோர் அவரை சாமாதானப்படுத்தி அழைத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் லாவண்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக லாவண்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேஷிடம் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments