பட்டாக்கத்தியுடன் உலா வந்த மர்ம கும்பல்.. பொதுமக்களை தாக்கி மிரட்டி அட்டூழியம்..!

0 4971
பட்டாக்கத்தியுடன் உலா வந்த மர்ம கும்பல்.. பொதுமக்களை தாக்கி மிரட்டி அட்டூழியம்..!

சென்னை சேலையூரில் புகைப்படத்துடன் உலா வந்த மர்ம கும்பல் ஒன்று அப்பகுதி மக்களை பட்டாகத்தியால் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது 6 இரு சக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் ஹெல்மெட் அணிந்து வந்த 12பேர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகைப்படம் ஒன்றை காட்டி இவரை தெரியுமா என்று கேட்டுள்ளனர்.

இதற்கு தெரியாது என்று பதிலளித்த போது தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்பகுதி மக்களையும் கத்தியால் மிரட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments