காங். பிரமுகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் ஒருவர் கைது..!

0 2011
காங். பிரமுகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் ஒருவர் கைது..!

பஞ்சாபில் தொழில் முறை முன் விரோதத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூசேவாலாவின் கொலையாளிகளில் ஒருவரை உத்தரகாண்ட் போலீசார் டேராடூனில் கைது  செய்துள்ளனர்.

பஞ்சாப் காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்   மன்பிரீத் சிங் பாவ் என்பவரை போலீசார் மானசா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 5 நாள் போலீஸ் காவலில் அடைத்தனர்.

கடந்த 28 ஆம் தேதி காங்கிரஸ் பிரமுகர் சித்து மூசாவாலா வின் பாதுகாப்பு விலக்கப்பட்டதையடுத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்வை ஏற்படுத்தியிருந்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடி கும்பலின் தலைவரின் கூட்டாளிகளால் இந்த படுகொலை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே சித்துவின் இறுதிச் சடங்குகள் அவருடைய சொந்த ஊரான மூசாவில் நடைபெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments