அமெரிக்காவில் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

0 3493

அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாகாணத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஒமாஹா நகரில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அது மளமளவென ஆலை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், அடர்த்தியான கரும்புகை மற்றும் கடுமையான தீப்பிழம்புகள் சில மைல்களுக்கு அப்பால் வரை காணப்பட்டன.

கட்டுக்கடங்காத அளவில் கரும் புகை வெளியேறியதால் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments