முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு வழங்கிய கர்ப்பிணி பெண்..!

0 2903

நாகையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கர்ப்பிணி மீனவப் பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை வழங்கினார்.

வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடை கல்லாறு வாய்க்கால் தூர்வாரப்பட்ட பணியை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மீனவப் பெண், இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார்.

முன்னதாக திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தனது பாட்டி அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர், கலைஞர் அருங்காட்சியக பணிகளை பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments