தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0 2978

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தென்மலா பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்று திரும்பிய தனியார் பேருந்து ஒன்று மடதர பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திருவனந்தபுரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, குறுகலான சாலையில் வேகமாக வளைந்ததாக கூறப்படும் நிலையில், கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.

இதில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments