மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு.. 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்

0 2479
மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

திமுக சார்பில் கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமாரும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரும் தங்களை முன்மொழிய 10 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால், பரிசீலனையின் போது அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments