தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. பெண் உட்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

0 6139
தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. பெண் உட்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காரும்- தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட கார், ஆயில்பட்டியில் முன் சென்ற காரை முந்த முயன்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது.

மோதிய வேகத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதோடு, பேருந்தும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்தவர், கல்லூரி மாணவிகள் என 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments