10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

0 2820

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளதால் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. நாளை முதல் வரும் 4ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்று முதல் வரும் 4ம் தேதி வரை அரபிக்கடல், இலட்சத்தீவு, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments