நேபாளம் விமான விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உடல்களும் மீட்பு

0 2402

நேபாளத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொக்காரோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக 9 என்.ஏ.இ.டி விமானம் நேற்று முன்தினம் 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 16 நேபாளிகள் என 22 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் முஸ்டாங் மாவட்டத்தின் உள்ள கோவாங் கிராமத்திலுள்ள மலையில் விழுந்து நொறுங்கியது.

நேற்று இரவு வரை 21 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய ஒரு உடலும் இன்று காலை மீட்கப்பட்டது. விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதால், விபத்துக்கான காரணத்தை அறிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments