சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல்.. போலீசார் விசாரணை.!

0 2099

சென்னையை அடுத்த மாங்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் வீட்டிற்குச் சென்ற மர்ம நபர்கள் கத்திமுனையில் அவரைக் காரில் கடத்திச் சென்றுள்ளனர். சுரேஷ்குமார் தனது வீட்டை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த நிலையில், முன்பணம் கொடுக்க சிலர் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது, 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி சுரேஷ்குமாரை காரில் கடத்திச் சென்றதாகவும், சுரேஷ்குமார் தங்களுக்கு ஒரு கோடி தர வேண்டும் என கூறியதாகவும் கூறப்படுகிறது. போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments