டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு.!

0 1614

தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றினால், சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. டெல்லியில் கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments