பொருளாதார நெருக்கடியால் கேரளத்தில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்..!

0 3813
பொருளாதார நெருக்கடியால் கேரளத்தில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்..!

வெளிநாடு செல்லும் இலங்கை விமானங்கள் எரிபொருள் செலவைக் குறைக்கத் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்து எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன.

பொருளாதார நெருக்கடியால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் பெரும்பாலான நெடுந்தொலைவு விமானச் சேவைகளை சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுத்திக் கொண்டது.

ஜெர்மனியின் பிராங்க்பர்ட், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரங்களுக்குச் செல்லும் சேவைகள் மட்டும் இலாபத்தில் இயங்குவதால் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில் கொழும்பில் இருந்து இந்நகரங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கு திருவனந்தபுரத்தில் இந்திய விமானங்களுக்கு வழங்கும் அதே விலையில் எரிபொருள் வழங்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments