தெலங்கானா மாநில பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கார் மீது கற்கள், காலணிகள் கொண்டு தாக்குதல்..!

0 3371
தெலங்கானா மாநில பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கார் மீது கற்கள், காலணிகள் கொண்டு தாக்குதல்..!

தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டியின் கார் மீது சிலர் காலணி, கற்கள் மற்றும் நாற்காலிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

கட்கேசர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மல்லா ரெட்டி, முதலமைச்சர் சந்திரசேகர் ராவை புகழ்ந்து பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் மல்லா ரெட்டியை கீழே இறங்கும் படி கூச்சலிட்டனர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்படும்போது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments