சென்னை விஆர் மால் பார்ட்டியில் போதைப்பொருள் விநியோகித்த மூவர் கைது..!

0 14409
சென்னை விஆர் மால் பார்ட்டியில் போதைப்பொருள் விநியோகித்த மூவர் கைது..!

சென்னை வி.ஆர் மாலில் அனுமதியின்றி நடந்த டிஜே பார்ட்டியில் மது விருந்து நிகழ்ச்சியின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் போதைப்பொருள் விநியோகித்த கல்லூரி மாணவி உட்பட 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பார்ட்டியில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த், டிப்ளமோ மாணவர் அப்துல் ஹமீத், கல்லூரி மாணவி டாக்கஸ் ஆகியோர் போதைப்பொருட்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து விஆர் மாலில் நடந்த பார்ட்டி மட்டுமல்லாமல் சென்னையில் பல்வேறு பார்ட்டிகளிலும் போதைப்பொருட்கள் விநியோகித்தது தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments