நாமக்கல்லில் 19 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் 5 பேர் கைது.!

0 2800

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே 19 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

குப்பநாயக்கனூரை சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜீவா, ஹரிஹரசுதன் என்பவருக்கு சொந்தமான 40 டன் மிளகை விற்பனை செய்துவிட்டு வந்த போது அவரது பைக்கை வழிமறித்த கும்பல்,  ஜீவா மீது மிளகாய் பொடியை தூவி 19 லட்சம் ரூபாய், பைக், செல்போனை பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜீவா, கூட்டாளிகளுடன் சேர்ந்த வழிப்பறி நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து, வெவ்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்த வழிப்பறியில் தொடர்புடைய ஜீவா உட்பட 5 பேரை கைது செய்த போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments