குஜராத்தில் உள்ள போர்டு கார் தொழிற்சாலையை வாங்கும் டாட்டா.. ஆலையை டாட்டா நிறுவனம் எடுக்க மாநில அமைச்சரவை ஒப்புதல்..!

0 3930
குஜராத்தில் உள்ள போர்டு கார் தொழிற்சாலையை வாங்கும் டாட்டா.. ஆலையை டாட்டா நிறுவனம் எடுக்க மாநில அமைச்சரவை ஒப்புதல்..!

குஜராத்தின் சானந்தில் உள்ள போர்டு கார் தொழிற்சாலையை டாட்டா மோட்டார்ஸ் எடுத்துக்கொள்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள ஆலைகளில் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளப்போவதாக போர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது.

இந்நிலையில் குஜராத்தில் உள்ள போர்டு ஆலையை டாட்டாவுக்கு விற்பது தொடர்பாக இரு நிறுவனங்களும் பேச்சு நடத்தின.

திங்களன்று இது குறித்துக் குஜராத் அரசு, டாட்டா மோட்டார்ஸ், போர்டு ஆகியவற்றின் இடையே புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments