சிறைத்துறை அதிகாரியின் மகளை திருமணம் செய்து விட்டு, மீண்டும் வேறொரு திருமணம் செய்ய முயன்ற காவலர் மீது வழக்குப்பதிவு..!

0 10399
சிறைத்துறை அதிகாரியின் மகளை திருமணம் செய்து விட்டு, மீண்டும் வேறொரு திருமணம் செய்ய முயன்ற காவலர் மீது வழக்குப்பதிவு..!

கோவையில் சிறைத்துறை அதிகாரி ஒருவரின் மகளை காதலித்து திருமணம் செய்து அவரது வீட்டிலேயே விட்டுவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறைக் காவலராக பணியாற்றிய சிவக்குமார், அந்த சிறையின் அதிகாரி மகளுடன் பழகி வந்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ரவிக்குமார் பணி மாறுதலாகி திருப்பூருக்கு சென்றிருக்கிறார்.

பெண்ணின் வற்புறுத்தலின் பேரில் கடந்த மார்ச் மாதம் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்ட ரவிக்குமார், தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டு வேறொரு பெண்ணை மணந்துக் கொள்ள ஆயத்தமாகியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவலர் மீதும் அவரது பெற்றோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments