கோவையில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி..!

0 2566

கோவை மாவட்டம் மருதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

காலையில் பணம் எடுக்க வந்த சிலர், மெஷினின் கீழ் பாகம் உடைக்கப்பட்டதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, நள்ளிரவில் முகமூடி கொள்ளையன் மெஷினின் சில பாகங்களை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும், பணத்தை எடுக்க முடியாததால் அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது.

அந்த ஏ.டி.எம்மில் காவலாளி யாரும் இல்லையென கூறப்படும் நிலையில், காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments