சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.!

0 2658

திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இண்டிகோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திருத்தணியை சேர்ந்த ராஜேஷ்குமார் - ஆஷா தம்பதியர் நேற்று காரில் திருவள்ளூர் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். புதூர் அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

உடனடியாக காரை ஓரமாக நிறுத்தி இருவரும் இறங்கியுள்ளனர். சிறிது நேரத்திலேயே காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. மின் கசிவால் தீப்பிடித்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments