வேலூரில் நகை அடகு கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது.!

0 2352

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகை அடகு கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேர்க்காடு கூட்ரோடு பகுதியில் உள்ள அடகு கடையில் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க வெள்ளி நகைகள் கடந்த 24-ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டன.

புகாரின் பேரில் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments