புதுச்சேரியில் மது அருந்தியதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் - பார் ஊழியர்கள் மீது தாக்குதல்

0 7503

புதுச்சேரியில் மது அருந்தியதற்கு பணம் கேட்ட மதுக்கடை உரிமையாளரை இளைஞர்கள் உருட்டு கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மதுக்கடைக்கு வந்த 2 இளைஞர்கள் மது அருந்தி விட்டு, பில் தொகையில் பாதியை மட்டும் தான் தரமுடியும் என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆதரவாளர்களை வரவழைத்து கடையின் உரிமையாளரை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments